கொரோனாவிற்கு பயந்து ஒன்றரை வருடமாக வீட்டை விட்டு வெளியே வராத குடும்பம்…! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…?

கொரோனாவிற்கு பயந்து ஒன்றரை வருடமாக வீட்டை விட்டு வெளியே வராத குடும்பம். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ், கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு, பலர் மீண்டு வந்திருந்தாலும், பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த வைரஸானது, மக்கள் மத்தியில் உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில், ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், சீனிவாசலு என்ற விவசாயி, தனது மனைவி, ஒரு மகன் மற்றும் 2 மகள்களுடன் கூடாரம் அமைத்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்கள் கொரோனாவிற்கு பயந்து ஒன்றரை வருடமாக வெளியே வராமல் இருந்துள்ளனர். வீட்டிற்கு தேவையானவற்றை அவரது மகன் மட்டும் வாரத்திற்கு ஒருமுறை வெளியே சென்று வாங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட வீட்டுமனை பட்டா அளிப்பதற்காக, வட்டாட்சிய அலுவலக ஊழியர்கள் அங்கு சென்றனர். ஆனால், அதனை பெற்றுக் கொள்ள அவர்கள் கூடாரத்தை விட்டு வெளியே வரவில்லை. இதனையடுத்து, அவர்களை போலீசார் உதவியுடன் வெளியே அழைத்த வந்துள்ளனர். குடும்பத்தார் அனைவரும், மெலிந்த நிலையில், உடல்குன்றிய நிலையில் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, போலீசார் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.