“கொரோனாவுக்கு எதிரான போர் முடிவுக்கு வரும் காலம் அருகில் கூட இல்லை!”- மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்.

கொரோனாவுக்கு எதிரான போர், முடிவுக்கு வரும் காலம் அருகில் கூட இல்லை என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில் நாள் ஒன்றுக்கு 80 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகிவரும் நிலையில், அதனை தடுக்க தளர்வுகளுடனான ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்தநிலையில், மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கொரோனாவுக்கு எதிரான போர், முடிவுக்கு வரும் காலம் அருகில் கூட இல்லை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கு மத்திய அரசு பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், உயிரிழப்புகளை தடுக்க மத்திய அரசால் முடியும் என தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போர், முடிவுக்கு வரும் காலம் அருகில் கூட இல்லை என தெரிவித்த அவர், கொரோனா மேலும் சில காலங்களுக்கு நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.