கோலி தோனி குறித்து பேசிய கவுதம் கம்பீர்..!

இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சமீபத்தில் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் தோனிக்கும் , விராட் கோலிக்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி கூறியுள்ளார்.

அதில் பேசிய கௌதம் கம்பீர் ஐபிஎல் அணி தலைமையைப் பொறுத்தவரை விராட் கோலி ஒரு முறைகூட கோப்பை வென்றதில்லை, ஆனால் தோனி இதுவரை மூன்று முறை கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்.

மேலும் விராட் கோலி விளையாடுவதை பார்த்து அவர் அணியில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்கள் அவரிடமிருந்து சிலவற்றைக் கற்றுக் கொள்ளலாம்.ஐபிஎல் முதல் போட்டி களுக்கு சிஎஸ்கே அணியில் தோனி அணியில் எந்த ஒரு வீரரையும் மாற்றம் செய்ய மாட்டார். முதலாவதாக விளையாடும் 7 போட்டிகளுக்கும் நிரந்தரமாக மாற்றம் செய்யாமல் இருப்பார்.

ஆனால் கோலியை காட்டிலும் முதலில் அணியில் உள்ள ஏகப்பட்ட வீரர்கள் ஏமாற்றம் செய்வார். அதனால் தான் ஆர்சிபி அணி சிறப்பாக இல்லை என்று நான் கூறுவேன். விராட் கோலி தோனியை போல் கிரிக்கெட் வீரர்களை மாற்றாமல் அதை வீரர்களை வைத்து விளையாடுவது மிகவும் அவசியம் என்றும் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.