அழுத குழந்தைக்கு ஐந்து ரூபாய் தர மறுத்து ஆத்திரத்தில் தரையில் அடித்துக் கொன்ற குடிகார தகப்பன்!

அழுது கொண்டிருந்த தனது குழந்தைக்கு ஐந்து ரூபாய் கொடுக்குமாறு மனைவி கேட்டதை அடுத்து குழந்தையின் தந்தை ஆத்திரத்தில் குழந்தையை தரையில் அடித்து கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோண்டியா என மாவட்டத்தில் உள்ள லொனோரா எனும் கிராமத்தில் வசித்து வரக்கூடிய விவேக் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவருக்கு தற்போது ஒன்றரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் விவேக்குக்கு அதிகளவில் குடிப்பழக்கம் இருப்பதாகவும், இதனால் அடிக்கடி மனைவியிடம் இவர் சண்டையிடுவார் எனவும் கூறப்படுகிறது. இவரது குழந்தை ஐந்து ரூபாய் இனிப்பு வகையான கஜா எனும் ஒரு திண்பண்டத்தை கேட்டு அழுதுள்ளது. இதனை அடுத்து விவேக்கின் மனைவி அவரிடம் சென்று குழந்தை அழுகிறது ஐந்து ரூபாய் கொடுங்கள் என கேட்க குடிகார கணவனாகிய விவேக் ஆத்திரத்தில் ஐந்து ரூபாய் கொடுக்க மறுத்துள்ளார்.

 அதன் பின் கோவத்தில் அழுது கொண்டிருந்த குழந்தையை தரையில் தூக்கி அடித்துளளார். இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளது. குழந்தையை காப்பாற்ற தாய் எவ்வளவு போராடினாலும் தலையில் அடிபட்டதால் குழந்தை அவ்விடத்திலேயே உயிரை இழந்தது. தனது கணவரின் செயலால் மனமுடந்த குழந்தையின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விவேக்கை கைது செய்துள்ளனர். குடித்துவிட்டு என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் தனது குழந்தையையே கொன்றுள்ள விவேக்கின் செயல் அருகில் உள்ளவர்களை கலங்க வைத்துள்ளது.

Rebekal

Recent Posts

பேனரை கிழிச்சது தப்பு தான்! மன்னிப்பு கேட்ட அஜித் ரசிகர்!

Ajith Kumar Fan : தீனா படத்தின் ரீ -ரிலீஸின் போது விஜயின் கில்லி பட பேனரை கிழித்த அஜித் ரசிகர் மன்னிப்பு கேட்டுள்ளார். சினிமாத்துறையில் அஜித்…

6 mins ago

நேற்று சற்று குறைந்த தங்கம் விலை இன்று கிடுகிடுவென உயர்வு.!

Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…

10 mins ago

ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யுமா ராஜஸ்தான்? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரிட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…

3 hours ago

கடன் தொல்லையிலிருந்து விடுபட மைத்ரேய முகூர்த்தத்தை பயன்படுத்திக்கோங்க.!

மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…

4 hours ago

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

11 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

17 hours ago