திடீர் மழை.! சாலையில் காய வைக்கப்பட்ட 5000 நெல்மூட்டைகள் சேதம்.! தமிழக விவசாயிகள் வேதனை.!

அரசு நிர்ணயித்த ஈரப்பத அளவுக்கு கொண்டு வர நெற்பயிரை சாலைகளில் கொட்டி காயவைத்துள்ளார் திருவாரூர் பகுதி விவசாயிகள். ஆனால், திடீரென்று பெய்த மழையால் மேலும் ஈரப்பதம் கூடி விட்டது என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.  

காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் தற்போது அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு கொள்முதல் நிலையங்களில் கொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

அறுவடை செய்த நேரத்தில் மழை பெய்து வரும் காரணத்தால் அரசு நிர்ணயித்துள்ள 17 சதவீத அதிகபட்ச ஈரப்பத அளவுக்கு காய வைக்க முடியாமல், ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர் .

ஈரப்பத சதவீதத்தை அதிகரிக்க கோரி தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

இப்படி இருக்கும் நிலையில், திருவாரூர் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட ஈரப்பத அளவுக்கு கொண்டு வர சுமார் 5000 மூட்டைகள் அளவுக்கு நெற்பயிரை சாலையில் காய வைத்துள்ளனர்.

அப்போது பெய்த மழையால் மேலும் ஈரப்பதம் கூடிவிட்டது. இதனால் மீண்டும் ஈரப்பதம் கூடிவிட்டதே என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment