சமையல் எரிவாயு உருளை வெடித்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு.!

சமையல் எரிவாயு உருளை வெடித்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி புதுகாமூர் தெருவில் வசித்து வருபவர் முத்தாபாய்(65) . இவர் மீனா(17) என்ற தனது வளர்ப்பு மகளுடன் வசித்து வருகிறார் . இவரது வீட்டின் ஒரு பகுதியில் ஜானகிராமன் (40) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் .  இவர்களுக்கு காமாட்சி என்ற மனைவியும்,  சுரேஷ் மற்றும் ஹேமந்த் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் மீனா சமையல் செய்ய‌ எரிவாயு அடுப்பை பற்ற வைத்ததும் , திடீரென சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தது.இதில் இடிபாடுகளில் சிக்கி காமாட்சியும் , அவரது மகன் ஹேமந்தும் உயிரிழந்தனர் .மேலும் முத்தாபாய் வீட்டிற்கு அருகிலுள்ள சந்திராம்மாள் என்பவரது வீடும் இடிந்து விழுந்ததில் அவரும் பரிதாபமாக இறந்தார்.

அதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் ,  இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த மீனா , ஜானகிராமன், சுரேஷ் மற்றும் முத்தாபாய் ஆகியோர் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்ட பின்,  அங்கிருந்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு மீனா, சுரேஷ் மற்றும் முத்தாபாய் ஆகிய மூவரையும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர் .

இந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்தாபாய் மற்றும் அவரது மகள் மீனா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் . சமையல் எரிவாயு உருளை வெடித்து நிகழ்ந்த விபத்தில் பலியானார்களின் எண்ணிக்கை தற்போது 5-ஆக உயர்ந்துள்ளது .

Leave a Comment