பெண்சிசுக் கொலை தலைதூக்குவது வேதனை அளிக்கிறது – மு.க ஸ்டாலின்

பெண்மையைப் போற்றும் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைக்கு அவமானமாக மீண்டும் பெண்சிசுக் கொலை தலைதூக்குவது வேதனை அளிக்கிறது என திமுக தலைவர் முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புள்ளநேரியில் 2-வதாகப் பிறந்த பெண் குழந்தையைப் பிறந்து 31 நாட்கள் ஆன நிலையில், பெற்றோரே கள்ளிப்பால் ஊற்றிக் கொன்று புதைத்திருப்பது இதயம் உள்ளோர் அனைவரையும் பதற வைக்கிறது என கூறியுள்ளார்.

மேலும்  கண்டனத்திற்குரிய இந்த கொடூர செயலில் ஈடுபட்டோர் மற்றும் துணைநின்றோர் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகி வரும் நிலையில், பெண்குழந்தைகள் பாதுகாப்பு நாள்  கொண்டாடும் ஆட்சியாளர்கள் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையில் பெண்சிசுக்களை பாதுகாக்க வேண்டும் என்று முக ஸ்டாலின் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்