இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், மக்கள் தீர்ப்பே உறுதியானது என்பதை போட்டியாளர்களும் உணர்ந்து கொள்ளும் நாள் நெருங்கிவிட்டது என கமல் கூறியுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். அனிதா, கேப்ரியல்லா, சோம், ரியோ, ரம்யா, பாலா, சிவானி, ஆரி, ஆஜீத் ஆகியோர் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் வழக்கம் போல வாரம்தோறும் கமல் போட்டியாளர்களை நேரில் சந்தித்து பேசுவது போல இன்றும் பேச உள்ளார்.
ஆனால் போட்டியாளர்கள் மக்கள் தீர்ப்பே இறுதியானது என்பதை இன்னும் நினைவில் கொள்ளாமல் இருப்பதாகவும், தவறை சுட்டிக் காட்டுபி போது கோபம் கொள்பவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் தப்பை அவர்கள் உணர்ந்து கொள்ள மறுக்கிறார்கள். மக்கள் தீர்ப்பு இறுதியானது என்பதை அவர்களும் உணர்ந்து கொள்ளும் நாள் வரப்போகிறது என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,
View this post on Instagram