டெல்லியில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட குற்றவாளி!

டெல்லியில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட குற்றவாளி.

டெல்லியின் ரோஹினி பகுதியில் அஜய் என்ற குற்றவாளி போலீஸ் சிறப்பு பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். டெல்லியின் அமன் விஹார் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் அஜய் என்ற குற்றவாளியை போலீசார் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், அஜய் தனது போட்டி கும்பல் உறுப்பினர் சந்தீப்பைக் கொல்லும் திட்டத்தை இறுதி செய்த பின்னர் திரும்பி வந்தபோது, போலீசார் என்கவுண்டரில் சுட்டுள்ளனர். மேலும், அஜய் மீது,  கொலை, கொலை முயற்சி மற்றும் கடத்தல் ஆகிய 13 வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.