நாகர்கோவிலில் காங்கிரஸ் – பாஜக தொண்டர்கள் மோதல்.! காங்கிரஸ் கட்சி கண்டனம்.!

நாகர்கோவிலில் காங்கிரஸ் – பாஜக தொண்டர்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாஜக – காங்கிரஸ் தாக்குதல் :

இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது பாஜக நிர்வாகிகளுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறாக மாறியது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காங்கிரஸ் கண்டனம் :

இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சியினர் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் :

அகில இந்திய காங்கிரஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், நாகர்கோவிலில் அமைதியாக இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் மீது பாஜக ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை தாக்குதலானது, ஜனநாயகம் மற்றும் போராட்ட சுதந்திரத்தின் மீதான தாக்குதல் ஆகும். என விமர்சித்தனர்.

நடவடிக்கை தேவை :

மேலும், இந்த கொடூரமான வன்முறைச் செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் மற்றும் விரைவான நடவடிக்கையைக் கோருகிறோம். என்றும் காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment