எச்சில் தொட்டு பயண சீட்டு கொடுத்த நடத்துனர்….! அதிரடியாக கொரோனா பரிசோதனை செய்த அதிகாரிகள்…!

எச்சில் தொட்டு பயண சீட்டு கொடுத்த நடத்துனருக்கு கொரோனா பரிசோதனை.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கைக்கொள்ள வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை கோவையில் இருந்து திருப்பூருக்கு வந்த அரசுப் பேருந்து ஒன்றில் நடத்துனர் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் போது எச்சில் தொட்டு வழங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கொரோனா  காலகட்டம் என்பதால் இது போல் எச்சில் தொட்டு தரவேண்டாம் என்று அறிவித்து உள்ளனர். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் நடத்துனர் மீண்டும் மீண்டும் எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்கியுள்ளார்.

இதனை அடுத்து பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் திருப்பூர் சுகாதாரத்துறை அதிகாரிக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில், பேருந்து திருப்பூரை வந்தடைந்ததும், நடத்துனரும் கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.