தமிழக ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும்.! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் மாபெரும் பேரணி…

தமிழக ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்று வருகிறது. 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்று வருகிறது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அள்ளிக்கவில்லை. குறிப்பாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான சட்ட மசோதாவுக்கும் ஆளுநர் ரவி கையெழுத்திடவில்லை.

தொடர்ந்து தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் எதிராக ஆளுநர் செயல்படுகிறார் என்றும், மத்திய அரசுக்கு சாதகமாக அவர்கள் கூறுவதற்கு மட்டும் செயல்படுகிறார் என்றும், அதனால் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேரணி நடைபெற்று வருகிறது.

இந்த பேரணியை சைதாப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில பொதுச்செயலாளர் டி.ராஜா தலைமை தாங்கி நடத்தி வருகிறார். அவர்களுக்கு சைதாப்பேட்டை பனகல் மாளிகை வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேரணியில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment