தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு.! சந்தேகப்படும்படி இருந்ததால் சுட்டோம்.! கடற்படை விளக்கம்.!

நடுக்கடலில் சந்தேகப்படும்படியாக படகு நின்றதாலும், அதனை முன்னேறவிடாமல் தடுக்கவே படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கடலோர காவல்படையினர் சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது .  

நேற்று நள்ளிரவு மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகு மீது இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர் .

இந்த துப்பாக்கி சூட்டில் வீரவேல் எனும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர் குண்டடி பட்டு காயமுற்றார். இவருக்கு ராமநாதபுரத்தில் முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, துப்பாக்கி குண்டை அகற்றுவதற்கும், மேற்சிகிச்சைக்கும் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் மீனவர் வீரவேல் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து இது குறித்து இந்திய கடலோர காவல்படையினர் விளக்கம் கொடுத்துள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட படகு நடுக்கடலில் சந்தேகப்படும்படியாக நின்றது. அதனை சோதனைக்காக நிறுத்த கூறினோம். ஆனால், அவர்கள் நிறுத்தவில்லை.

அவர்களை முன்னேறவிடாமல் தடுக்கவே துப்பாக்கியால் சுட்டோம். அதில் தவறுதலாக வீரவேல் மீது குண்டடி பட்டது. உடனே ஹெலிகாப்டர் உதவியுடன் நடுக்கடலில் இருந்து ராமநாதபுரம் கொண்டு சென்றோம் என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறோம் எனவும் கூறப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment