#BREAKING:10 புதிய ஆம்புலன்ஸ்களின் சேவையை தொடங்கி வைத்த முதல்வர்..!

தலைமை செயலகத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

அண்ணா நூற்றாண்டு நூலக நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சென்னை தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 108 ஆம்புலன்ஸ் வாகனம் சேவையை தொடங்கி வைத்துள்ளார். 1.77 கோடி மதிப்பில் 10 ஆம்புலன்ஸ்களைத் கரூர் வைஸ்யா வங்கி வழங்கியது. இந்த புதிய 10 ஆம்புலன்ஸில், 8 ஆம்புலன்ஸ்கள் மலைப்பகுதியில் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், மா சுப்பிரமணியன். எ.வ.வேலு மற்றும் உயரதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

author avatar
murugan