370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு!

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து  செய்யப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது மத்திய அரசு .

ஜம்மு காஷ்மீருக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ ரத்து எனவும் , ஜம்மு காஷ்மீர் மற்றும்  லடாக் ஆகியவை  இரண்டும்  யூனியன் பிரதேசமாக மாற்றப்ப்படும்  என அமித்ஷா அறிவித்தார்.

இதனிடையில் மாநிலங்களவையில் கடும் அமளியும் எதிர்ப்பும் கிளம்பியது. காஷ்மீர் அதன் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என அமித்ஷா கூறினார் .

மாநிலங்களவையில் இந்த மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும் ,  எதிராக 61 வாக்குகளும் பதிவாகியது.மக்களவையில் இந்த  மசோதாவுக்கு ஆதரவாக 351 வாக்குகளும் , எதிராக 72 வாக்குகளும் வாக்களித்தனர். இறுதியாக இந்த மசோதா  மக்களவையிலும் , மாநிலங்களவைலும் இரண்டிலும்  நிறைவேற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து  செய்யப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது மத்திய அரசு .அந்த அரசாணையில் குடியரசு தலைவர் ஒப்புதலுடன் மத்திய சட்டத்துறை அமைச்சகம் அரசாணையை வெளியிட்டுள்ளது.

 

author avatar
Dinasuvadu desk