அதானி குழும விவகாரம் தொடர்பான வழக்கு..! மே-15ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!

அதானி குழும விவகாரம் தொடர்பான வழக்கை மே-15ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், அதானி குழுமம் பங்குசந்தையில் முறைகேடாக ஈடுபட்டதாக ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டதன் அடிப்படையில் அதானி குழுமம் பங்குசந்தையில் பெரும் சரிவை கண்டது.

இந்த ஹிண்டன்பர்க் அறிக்கை மற்றும் அதானி குழும விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால் இரு அவைகளிலும் அமளி நிலவியதால் அவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டிஓய் சந்திர சூட், நீதிபதிகள் பி.எ.ஸ்.நரசிம்ஹா, ஜே.பி. பரதிவாலா அமர்வு அதானி விவகாரம் தொடர்பாக விசாரிக்க நிபுணர் குழு ஒன்றை அமைத்தனர். அந்த நிபுணர் குழுவானது தங்கள் விசாரணையை நிறைவு செய்து, விசாரணை அறிக்கையை மே-10 அன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த விசாரணை அறிக்கையை அடிப்படையாக் கொண்டு மே-12 அதாவது இன்று அதானி குழும விவகாரம் தொடர்பான விசாரணையை உச்சநீதிமன்றம் தொடங்கியது. இதில் விசாரணையை நடத்த 6 மாதம் அவகாசம் கேட்ட செபி (SEBI) அமைப்பின் கோரிக்கையை அடுத்து, அதானி விவகாரம் தொடர்பான வழக்கை மே-15ம் தேதி திங்கள் கிழமைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.