பற்களை பிடிங்கி துன்புறுத்திய விவகாரம் – அடுத்தகட்ட விசாரணை தேதியை அறிவித்த மாவட்ட ஆட்சியர்..!

பற்களை பிடிங்கி துன்புறுத்திய விவகாரம் தொடர்பாக, அடுத்த கட்ட விசாரணை வரும் 17,18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு.

நெல்லையில் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடிங்கிய விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மார்ச் 29ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணையை மேற்கொள்ள ஐஏஎஸ் அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி அரசு வெளியிட்டது. தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

 இந்த  நிலையில், விசாரணை கைதிகளின் பற்களை பிடிங்கி துன்புறுத்திய விவகாரம் தொடர்பாக, அடுத்த கட்ட விசாரணை வரும் 17,18 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment