தமிழ்நாட்டை தனியாக பிரிக்க வேண்டும் என்று பாஜக நினைக்கவில்லை – வானதி சீனிவாசன்

தமிழகத்தை தனியாக பிரிக்க வேண்டும் என்று பாஜக நினைக்கவில்லை என வானதி சீனிவாசன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

கோவை சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையிலுள்ள பாஜகவின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் அக்கட்சி சார்பாக ஆடிட்டர் ரமேஷின் எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டார்.

அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தை தனியாக பிரிக்க வேண்டும் என்று பாஜக நினைக்கவில்லை. கொங்குநாடு விவகாரத்தில் தனக்கு தனிப்பட்ட கருத்து எதுவும் கிடையாது . கட்சி பொறுப்பாளராக தான் கருத்தை தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும், கொங்குப் பகுதி மக்களின் வளர்ச்சி, தேவைகள், அபிலாசைகள் என பல ஆண்டு ஏக்கமாக உள்ள விஷயங்களை மாநில அரசு எவ்வாறு நிறைவேற்றப் போகிறது என்பதைப் பொறுத்தே கொங்குநாடு விவகாரத்தில் அடுத்த கட்ட பரிசீலனை இருக்கும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.