மொன்டானாவில் நெடுஞ்சாலையில் புயல் காரணமாக ஏற்பட்ட மிகப்பெரிய விபத்து..! 5 பேர் உயிரிழப்பு..!

மொன்டானாவில் உள்ள இன்டர்ஸ்டேட் 90 இல் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழப்பு. 

மொன்டானாவில் உள்ள இன்டர்ஸ்டேட் 90 இல் வெள்ளிக்கிழமை மாலை 4:30  மணியளவில் புழுதி  புயல் காரணமாக மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர்  உயிரிழந்துள்ளனர்.

இந்த குறித்து, மொன்டானா நெடுஞ்சாலை ரோந்து சார்ஜென்ட் கூறுகையில், மொன்டானாவில் உள்ள இன்டர்ஸ்டேட் 90 இல் வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட விபத்தில், குறைந்தது 20 வாகனங்கள் விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்திற்கு வானிலையே காரணம் என தெரிவித்துள்ளார்.

கவர்னர் கிரெக் ஜியான்ஃபோர்ட் தனது ட்விட்டரில், ஹார்டின் அருகே ஒரு பெரிய விபத்து நடந்த செய்தியால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களை உயர்த்த பிரார்த்தனையில் என்னுடன் சேருங்கள் என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment