ஒரு படத்திற்கு தேசிய விருதை விட மக்கள் பேசிய விருது தான் பெரியது : கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து புகழ்பெற்ற தமிழ் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். இவர் முதன்முதலில் நிழல்கள் என்னும் திரைப்படத்தில், பொன்மாலை பொழுதினில் என்ற பாடலை எழுதியுள்ளார். இவர் எழுதிய பல பாடல்கள் விருதுகளை பெற்றுள்ளது.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து, சென்னை தேனாம்பேட்டையில், அப்பொல்லோ மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தேசிய விருது கிடைக்கவில்லை  என்பதற்காக தமிழ் திரைப்பட கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம் என கூறியுள்ளார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைரமுத்து, ஒரு படத்திற்கு தேசிய விருதை விட, மக்கள் பேசிய விருது தான் மிகவும் பெரியது என்று கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.