பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கியது

பிப்ரவரி 17-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டத்தொடர் நடைபெற்றது.கடைசி நாள் கூட்டத்தில் , வேளாண் மண்டல மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால். பின் தமிழக சட்டபேரவை கூட்டம்இன்று  (மார்ச் 9 ஆம் தேதி) மீண்டும் கூடுகிறது என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கியது.பேரவையில், முன்னாள் உறுப்பினர் சந்திரன், முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் காத்தவராயன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.