‘நான் அப்படித்தான் செய்வேன்’ – குடிநீர் வழங்கல் வாரிய அலுவலகத்தில் மது அருந்திய ஊழியர்…!

இரவி நேரத்தில் குடிநீர் வழங்கல் வாரிய அலுவலகத்தில் மது அருந்திய ஊழியர்.

சென்னை திருவொற்றியூரில் உள்ள தியாகராயபுரம் 2-வது தெருவில், உள்ள குடிநீர் வழங்கல் வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் ஜீவா என்ற ஊழியர் அந்த அலுவலகத்தில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த குடிநீர் வாரிய அலுவலகத்தில் அடிக்கடி அதிகமான நபர்கள் உள்ளே சென்று வருவதால் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு பணிபுரியும் ஜீவா இரண்டு மூன்று பேரோடு சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். இதனையடுத்து, அந்த இளைஞர் அரசு அலுவலகத்தை மது கூடமாக பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு நான் அப்படித்தான் செய்வேன் என்று பேசியுள்ளார்.

இதனையடுத்து, இதனை வீடியோ எடுத்து இளைஞர்கள் இணையத்தில் பகிர்ந்தனர். தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமைச்சர்கள் இரவு நேரங்களில் அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், இவ்வாறு இரவு நேரத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அரசு அலுவலகங்களை மது கூடமாக கருதி, இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதை, அதிகாரிகள் கண்டித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.