பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி – நடிகர் ரஜினிகாந்த்!

தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இவருக்கு மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததாகவும்,  அறுவை சிகிச்சை மூலம் அந்த அடைப்பு அகற்றப்பட்டு தற்போது அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார் எனவும் காவேரி மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ரஜினிகாந்த் ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். இந்நிலையில் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்தபோது அவரது ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்காக பிரார்த்தனை செய்து கொள்வதாகவும், விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் எனவும் கூறி வந்தனர்.

தற்பொழுது இது தொடர்பாக ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து நலமாக உள்ளேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் அதே போல எனது நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

author avatar
Rebekal