ஐ நா அமைதிப் படையினருக்கு 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியதற்காக இந்தியாவிற்கு ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியா அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் வீரியம் மற்றும் அதன் தாக்கத்தைக் குறைப்பதற்காக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள தடுப்பூசிகள் தற்பொழுது அவசரகால அனுமதிக்கு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் தடுப்பூசிகள் இலவசமாகவும், விற்பனைக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐநாவின் அமைதி படையினருக்கு அண்மையில் இந்தியா சார்பில் 2,00,000 கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதற்கு ஐ.நா பொதுச் செயலாளர் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளதாக நிரந்தர இந்திய தூதர் திருமூர்த்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அதில் அமைதி படையினருக்கு 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக இந்தியா வழங்கியதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டரெஸ் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா அதிக அளவில் கொரோனாவுக்கு கு எதிரான நடவடிக்கையில் உலக அளவில் தலைமைத்துவத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை கருவியான வென்டிலேட்டர் விநியோகித்து வருவது குறித்தும் இந்தியாவை பாராட்டியுள்ளார் என தெரிவித்துள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…