மனமுவந்து நன்கொடை அளித்த அனைவருக்கும் நன்றி – முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக மனமுவந்து நன்கொடை அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ்  தீவிரமாக பரவி  வருவதால், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரபலங்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் கொரோனா நிவாரண நிதிக்காக தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி பல்வேறு பிரபலங்கள்  நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தங்களால் இயன்ற உதவி செய்துள்ளனர்.

 இதுவரையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதியாக ரூ.181 கோடி பெறப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மனமுவந்து நன்கொடை அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த நிவாரண நிதியிலிருந்து ஆக்சிஜன் கண்டெய்னர்களை வாங்க முதற்கட்டமாக ரூ.50 கோடியம், ஆர்.டி.பி.சி.ஆர் ஹிட்களை வாங்க ரூ.50 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.