TET :ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் : தமிழக அரசு அறிவிப்பு…!

ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில்(TET)தேர்ச்சி பெறுவோரின் சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லும் என்ற விதி அமலில் இருந்தது. இதனையடுத்து,அந்த சான்றிதழ் ஆயுள்முழுவதும் செல்லும் என்று மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது.

இந்நிலையில்,ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை ஆயுள்வரை நீட்டித்து உத்தரவிட்டதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.இதன்மூலம்,தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.