பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி!!செல்போன் இணையதள சேவை நிறுத்தம் !!

சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட ஜம்முவில் செல்போன் இணையதள சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.இதனால் அங்கு பதற்றம் நிலவியுள்ளது.

 

இந்நிலையில் தாக்குதலையடுத்து மாநிலத்தின் மற்றொரு தலைநகரான ஸ்ரீநகரிலும், தெற்கு காஷ்மீர் பகுதிகளிலும் இணையதள சேவையின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஜம்முவில் செல்போன் இணையதள சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment