பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்! பீதியில் மக்கள்!

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்.

நேற்று தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள லோரெங்காவ் நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கிய நிலையில், இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.7 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் சில வினாடிகளுக்கு மேல் நீடித்த நிலையில், வீடுகள், வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இதனையடுத்து மக்கள் அலறியடித்துக் கொண்டு, மக்கள் வீதிகளில் வந்து தஞ்சம் புந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, யாருக்கும் காயமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவரவில்லை.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.