சீனாவுடன் பதற்றம் ! அமெரிக்க போர் கப்பலுடன் இந்தியா பயிற்சி

அமெரிக்காவின் போர் கப்பலான நிமிட்ஸ் அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே உள்ள மலாக்கா பகுதியில் இந்திய போர் கப்பலுடன்  பயிற்சி மேற்கொண்டது.

லடாக் எல்லை பகுதியில் இந்திய- சீன ராணுவத்திற்கு இடையே ஜூன் 15 ஆம் தேதி நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, எல்லையில் போர்ப் பதற்றம் அதிகரித்தது. இதனால், பதற்றத்தைத் குறைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் காரணமாக இருதரப்பும் ராணுவ வீரர்களை படிப்படியாக குறைந்து வந்தனர்.

இதனிடையே இந்தியா சீனாவிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.குறிப்பதாக பிரதமர் மோடி லடாக் எல்லை பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.இவரை தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் அங்கு பயணம் மேற்கொண்டனர்.சீனாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.இந்த நிலையில் தான் அமெரிக்காவின் போர் கப்பலான நிமிட்ஸ் அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே உள்ள மலாக்கா பகுதியில் இந்திய போர் கப்பலுடன் நேற்று பயிற்சி மேற்கொண்டது. அணுசக்தியை இயங்கக்கூடிய நிமிட்ஸ் போர் கப்பல் உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர் கப்பல்  ஆகும்.