கோயில் நிலங்களை பிற பயன்பாடுகளுக்கு பயன்படுத்த கூடாது – உயர்நீதிமன்றம் .!

கோயில் நிலங்களை கோயில் பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், பிற பயன்பாடுகளுக்கு பயன்படுத்த கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோயில் நிலங்களை பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது தொடர்பாக வி.பி.ஆர்.மேனன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.

அதில், கோயில் நிலங்களை கோயில் விழாக்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதாவது, மத ரீதியான பயன்பாடுகளுக்கு மட்டுமே கோயில் நிலங்களை பயன்படுத்த வேண்டும் என்றும், வேறு எந்த பயன்பாடுகளுக்கும் கோயில் நிலங்களை பயன்படுத்த கூடாது என்றும் கோயில் அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார்.