பள்ளிகளில் விரிவாக திருக்குறள் பாடம் – தமிழக அரசுக்கு உத்தரவு

108 அதிகாரங்களில் உள்ள குறள்களை பாடத்தில் சேர்த்தது குறித்து தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் 6 முதல் 12 வரை உள்ள வகுப்புகளில் திருக்குறளின் 108 அதிகாரங்களையும் சேர்க்கவேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 108 அதிகாரங்களில் உள்ள 1050 குறள்களையும் கற்பிக்க ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு செயல்படுத்தவில்லை என மனுதாரர்

ராம்குமார் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் தற்போது 30 – 60 திருக்குறள் மட்டுமே இடம் பெற்றுள்ளதாக மனுதாரர் ராமர்குமார் குற்றசாட்டியுள்ளார். இந்த நிலையில் 108 அதிகாரங்களில் உள்ள குறள்களை பாடத்தில் சேர்த்தது குறித்து தமிழக அரசு 3 மாதத்தில் விளக்கமளிக்க நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment