பள்ளிகளில் விரிவாக திருக்குறள் பாடம் – தமிழக அரசுக்கு உத்தரவு

108 அதிகாரங்களில் உள்ள குறள்களை பாடத்தில் சேர்த்தது குறித்து தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் 6 முதல் 12 வரை உள்ள வகுப்புகளில் திருக்குறளின் 108 அதிகாரங்களையும் சேர்க்கவேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 108 அதிகாரங்களில் உள்ள 1050 குறள்களையும் கற்பிக்க ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு செயல்படுத்தவில்லை என மனுதாரர் ராம்குமார் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் தற்போது … Read more

டிஎன்பிஎஸ்சி – பாடத்திட்டத்தில் திருக்குறள் நீக்கம்! மாணவர்கள் அதிர்ச்சி!

TNPSC Group II Main பாடத்திட்டத்தில் 2019-ல் இடம் பெற்றிருந்த திருக்குள் பகுதி தற்போது நீக்கம். டிஎன்பிஎஸ்சி (TNPSC) அறிவிக்கை செய்யப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழித்தாள் கட்டாயமாக்கப்பட்டு, தமிழ் மொழியில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்த நிலையில், அதன் அடிப்படையிலான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் TNPSC இணையதளத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. தமிழ் மொழித் தாளுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள்: இந்த நிலையில், TNPSC வெளியிட்டுள்ள Group … Read more

திருக்குறளின் ஆழத்தால் திகைத்துப் போகிறேன் – ராகுல் காந்தி ட்வீட்

“திருக்குறல்” படித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அண்மை காலமாக தேசிய தலைவர்கள் தமிழ் மொழியின் இலக்கியமான திருக்குறளை மேற்கோள்காட்டி பேசி வருகின்றனர்.அந்த வகையில் நேற்று பிரதமர் மோடி தமிழகம் மற்றும் புதுவைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ” கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை “ என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி பேசினார். கல்வி எனும் அதிகாரத்தில், குறள் எண் 400-ல் இந்த குறள் இடம்பெற்றுள்ளது . … Read more

” கேடில் விழுச்செல்வம்” திருக்குறளை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர் மோடி

பிரதமர் மோடி திருக்குறளை மேற்கோள்காட்டி தமிழில் பேசியுள்ளார்.   இன்று பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி ஜிப்மர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்கட்டமைப்பு, துறைமுகங்கள், சுகாதாரம் மற்றும் விளையாட்டு தொடர்பான பல மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், பல திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி திருக்குறளை மேற்கோள்காட்டி தமிழில் பேசியுள்ளார். ” கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை  “ என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி பேசினார். கல்வி … Read more

இந்து தர்ம கோட்பாட்டின் அடிப்படையில் வள்ளுவம் -ஹெச்.ராஜா ட்வீட்

இந்து தர்ம கோட்பாட்டின் அடிப்படையில் வள்ளுவம் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் படத்தை பதிவிட்டது.அந்த படத்தில் திருவள்ளுவர் விபூதி மற்றும் காவி உடை அணிந்து இருப்பது போன்று இருந்தது.இதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சனாதன இந்து தர்மத்தில் சதுர்விதபுருஷார்த்தம் அதாவது நான்கு விதமான மானுட குறிக்கோள் தர்மார்த்த காம மோக்ஷம் என்கிறது. அதன் அடிப்படையிலேயே அறம்,பொருள்,இன்பம் என்று வள்ளுவர் திருக்குறளை வடிவமைத்தார். … Read more