8-ம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் தகாத முறையில் நடந்த ஆசிரியர்!

  • ஹைதராபாத்தில் ஆசிரியர் ஒருவர் 8 வகுப்பு படிக்கும் மாணவியிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.
  • இதன் காரணமாக காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நெரெட்மெட் பகுதியில் ஜில்லா பரிஷத் என்ற பள்ளி உள்ளது.அப்பள்ளியில் ஜெகதீஸ்வர் என்ற 38 வயது ஆசிரியர் பணிபுரிந்து வறுகிறார்.

இந்நிலையில் அந்த பள்ளியில் 8 -ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் ஆசிரியர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.இதனை அறிந்த பெரியோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.

அதற்கு அந்த சிறுமி தனது ஆசிரியர் அந்த மாதிரியான இடங்களில் தொடுவதாக கூறியுள்ளார்.இது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது என்று சிறுமி கூறியதை கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஆசிரியர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அந்த ஆசிரியர் வகுப்பறையில் இன்னும் பல மாணவிகளிடம் அவ்வாறு நடந்து கொண்டது தெரியவந்துள்ளது.ஆனால் இது குறித்து மற்ற ஆசிரியர்கள் ஜெகதீஸ்வர் ஒரு நல்ல ஆசிரியர் மாணவர்களிடம் அன்பாக நடந்து கொள்ள முயற்சி செய்வார்.

ஆனால் அது இவ்வாறு தவறாக குற்றம் சாட்டப்பட்டுவிட்டது என ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.ஆனால் சக மாணவிகள் ஆசிரியர் தங்களிடம் தகாத முறையில் நடந்து கொள்கிறார் என கூறியுள்ளனர்.

இதனால் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியரை கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.