டவ் தே புயல் – கடலோர பகுதிகளில் கனமழை.., வானிலை மையம் எச்சரிக்கை.!

டவ்-தே புயல் காரணமாக கேரளா கர்நாடகா கோவா போன்ற கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும்

அரபிக் கடலில் லட்சத்தீவுகளுக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி பின்னர், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயலாகவும் உருவாகியுள்ளது.

அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள டவ்-தே தீவிர புயலானது அதி தீவிர புயலாக வலுவடைந்து நாளை மறுநாள் குஜராத்தில் அருகே கரையை கடக்கவுள்ளது. இதனால், குஜராத் மாநில கடலோர பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள்  முடக்கிவிடப்பட்டுள்ளன.

டவ்-தே புயலால் உருவான முதலே கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், டவ்-தே புயல் காரணமாக கேரளா கர்நாடகா கோவா போன்ற கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

author avatar
murugan