குஜராத்தில் ஏற்பட்ட டவ்-தே புயல் பாதிப்பு.. பிரதமர் மோடி ஆய்வு..!

குஜராத் முதல்வர் விஜய் ரூபானியும், பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்று புயல் சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரபிக் கடலில் கடந்த வாரத்தில் உருவான ‘டவ்-தே’ புயலால் கடந்த சில நாட்களாக கேரளா, கர்நாடகா, கோவாமற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வந்தது. இந்நிலையில் இந்த புயல் நேற்று முன்தினம் இரவு, குஜராத் மாநிலத்தின் போர்பந்தர்-மாகுவா இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது மும்பை மற்றும் குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் 175 கி.மீ … Read more

அடுத்த மூன்று மணி நேரத்தில் வலுவிழக்கும் ‘டவ்-தே’ புயல்- இந்திய வானிலை மையம் அறிவிப்பு..!

அதிதீவிர புயலான ‘டவ்-தே’ புயல் அடுத்த மூன்று மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத்தில்,சவுராஷ்டிரா கடற்கரையின் டியு மற்றும் உனா இடையே நேற்று இரவு 9 மணியளவில் கரையை கடக்க தொடங்கிய அதிதீவிர ‘டவ்-தே’ புயல் செவ்வாய்க்கிழமை காலை 12 மணியளவில் முடிவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.’டவ்-தே’ புயலுக்கு முன்னர் மாநில அரசு இரண்டு லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியது. இதுகுறித்து,இந்திய வானிலை ஆய்வு மையம் … Read more

டவ்-தே இன்றிரவு கரையை கடக்கலாம் என கணிப்பு..!

இன்று இரவு டவ்-தே புயல் கரையைக் கடக்கலாம் என்று அகமதாபாத் வானிலை மையம் கணித்துள்ளது. குஜராத்தில்  இன்று இரவு டவ்-தே புயல் கரையைக் கடக்கலாம் என்று அகமதாபாத் வானிலை மையம் கணித்துள்ளது. இதுகுறித்து அகமதாபாத் வானிலை மையம் கூறுகையில், அதி தீவிர புயலாக டவ்-தே மாறியுள்ளது. புயல் வடக்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து மாலையில் குஜராத் கரையை அடையும். குஜராத் போர்பந்தர் மற்றும் மகுவா இடையே இரவு டவ்-தே புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் … Read more

கோவாவிற்கு செல்லும் அனைத்து விமான நிறுவனங்களின் விமானம் ரத்து..!

சூறாவளி “TAUKTAE” காரணமாக அனைத்து விமான நிறுவனங்களும் கோவாவிற்கும் அதன் விமானப் பயணங்களையும் இன்று ரத்து செய்துள்ளன. இந்திய வானிலை மையத்தின் படி ‘டவ் தே’ சூறாவளி மேலும் தீவிரமடையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் விமான பயண நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 12 விமான நிலையங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ‘டவ் தே’ புயல்  குஜராத்தை நெருங்கி வருவதால் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கோவாவின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்து … Read more

டவ் தே புயல் – கடலோர பகுதிகளில் கனமழை.., வானிலை மையம் எச்சரிக்கை.!

டவ்-தே புயல் காரணமாக கேரளா கர்நாடகா கோவா போன்ற கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் அரபிக் கடலில் லட்சத்தீவுகளுக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி பின்னர், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயலாகவும் உருவாகியுள்ளது. அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள டவ்-தே தீவிர புயலானது அதி தீவிர புயலாக வலுவடைந்து நாளை மறுநாள் குஜராத்தில் அருகே கரையை கடக்கவுள்ளது. இதனால், குஜராத் மாநில கடலோர பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள்  முடக்கிவிடப்பட்டுள்ளன. … Read more