ஐ.பி.எல் தொடரில் விளையாட இவருக்கு முழு தகுதியும் இருக்கிறது ! – தமீம் இக்பால்

ஐ.பி.எல் தொடரில் விளையாட மஹ்முதுல்லாவிற்கு முழு தகுதியும் இருக்கிறது என தமீம் இக்பால் கூறியுள்ளார்.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகெங்கும் பரவியுள்ளதால் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராம் லைவ், தொலைக்காட்சி பேட்டி, உடற்பயிற்சி என பலவற்றை செய்து நேரத்தை செலவழித்து வருகின்றனர்.

கொரோனா காரணமாக ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் டி20 தொடரும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் ஐ.பி.எல் ரசிகர்களுக்கு  ஐபிஎல் தொடர் நடைபெறுமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த ஐ.பி.எல் தொடரில் மற்ற உலக அணிகளில் இருந்தும் வீரர்கள் பங்கேற்று விளையாடுவார்கள். 

இந்நிலையில், பங்களாதேஷ் அணியின் ஓடிஐ கேப்டனான தமீம் இக்பால் ஐ.பி.எல் தொடரில் விளையாட அனைத்து தகுதிகளும் முகமது மஹ்முதுல்லாவிற்கு இருப்பதாக கூறியுள்ளார். பங்களாதேஷ் அணியின் டி20 கேப்டனான மஹ்முதுல்லா கடந்த  டி20 தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எனவே இவருக்கு ஐ.பி.எல் தொடரில் வாய்ப்பு கிடைக்காதது வருத்தமாக இருப்பதாக தமீம் இக்பால் கூறியுள்ளார். 

author avatar
Vidhusan