இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் துவங்கி, பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை மேலும் நீண்டது. அதன் பிறகு தற்போது உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது .

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்பாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. நாளை புயலாக வலுப்பெற்று வரும் 4ஆம் தேதி மாலை சென்னை மற்றும் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என கூறினார்.

புயல் எச்சரிக்கை.. மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

அடுத்த 3 தினங்களும் வடதமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்யும். இன்றும் நாளையும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை தொடரும். 3ஆம் தேதி திருவள்ளூர் முதல் கடலூர் வரையில் கடலோர மாவட்ட பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்யும்,

வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். 4ஆம் தேதி,  செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபும் திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 3ஆம் தேதி திருவள்ளூர் முதல் கடலூர் வரையில் பலத்த காற்று வீசக்கூடும். டிசம்பர் 4ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, விழுப்புரம் மாவட்டங்களில் 60 – 70 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது, கடந்த ஆண்டில் 36 செமீ பெய்துள்ளது. ஆனால இந்தாண்டு 34 செமீ வரையில் மட்டுமே பெய்துள்ளது . இதனை ஒப்பீடு செய்தால் மழையளவு 6 சதவீதம் குறைவு என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.