நவ.19,20,21 உள்மாவட்டங்களில் கனமழை….மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!!

நவ.19,20,21 உள்மாவட்டங்களில் கனமழை மற்றும் மீனவர்களுக்கு வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தை மிரட்டி எடுத்த கஜா புயலால் நாகை முற்றிலுமாக துண்டித்து விடப்பட்டது.மேலும் 6 மாவட்டங்களில் பலத்த சேதம் மற்றும் உயிரிழப்பு என தன் கோரத்தை காட்டி சென்ற கஜாவால் 6 மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், நவ.19 கடலோர மாவட்டங்களிலும், 20, 21ஆம் தேதிகளில் உள்மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment