தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களிலும் , தென் தமிழக மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக அவ்வப்போது கனமழை, மிதமான மழை என பருவமலைக்கு முன்பே பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

தற்போது வானிலை ஆய்வு மையம் கனமழை குறித்த தகவலை வெளியிட்டுள்ளது . அதன்படி, தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், தென் தமிழகத்திலும் இன்று கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும், சென்னையில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய நாமக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கரூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டத்தில் மழைபெய்ய வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கனமழை பெய்ய கூடும் என்பதால், குமாரி கடலோரம் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment