தமிழகத்துக்கு ஆரஞ்ச் அலர்ட்..! கனமழை முதல் மிக கனமழை.! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

தமிழகத்தில் வரும் நவம்பர் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு இடஙக்ளில் மிதமான மழை பெய்து வரும் சூழலில் தற்போது தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் நவம்பர் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

மேலும், 3ஆம் தேதியை அடுத்து தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறையும் எனவும், அதன் பிறகு மீண்டும் அதிகரிக்க கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment