கஜாவின் கோரத்தை பார்வையிட புறப்பட்டார் முதல்வர்..!!!

கஜா புயாலால் பாதித்த இடங்களை பார்வையிட முதல்வர் பழச்சாமி திருச்சி புறபட்டு சென்றார்.

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட நாகை , தஞ்சை ,திருவாரூர் , புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்து ஹெலிகாப்டர் மூலமாக  பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் இன்று காலை சென்னையில்  விமான நிலையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி ,துணைமுதல்வர் பன்னீர்செல்வம் திருச்சி புறப்பட்டனர். அங்கிருந்து   ஹெலிகாப்டரில் மூலம் புயலால் பாதிக்கப்பட்ட நாகை , தஞ்சை ,திருவாரூர் , புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்ட பகுதிகளை இரண்டு பேரும்   பார்வையிடுகின்றனர்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment