வாக்களித்தார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்!

Vijay : சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து விஜய் வாக்கு செலுத்தினார்.

இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19) நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழகத்தில்39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கே தொடங்கிய நிலையில், பொது மக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாக்கு செலுத்தி வருகிறார்கள்

அந்த வகையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தனது வாக்கை செலுத்துவதற்கு நீலாங்கரையில் உள்ள அவருடைய  இல்லத்தில் இருந்து வாக்குச்சாவடிக்கு காரில் வந்து வாக்கு செலுத்தினார். கோட் படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யாவில் இருந்த விஜய் வாக்கு செலுத்துவதற்காக விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்து இறங்கினார். அதன்பிறகு சென்னை நீலாங்கரை இல்லத்திற்கு சென்றார்.

இல்லத்தில் இருந்து வாக்கு செலுத்துவதற்கு காரில் ஏறி சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றார்.  அவருக்கு பாதுகாப்பாக பின்னாடியே பாதுகாவலர்களும் வந்தார்கள். விஜய் வருவதை அறிந்த ரசிகர்கள் கூட்டமாக அந்த இடத்தில் விஜயின் காரை தொடர்ந்து கொண்டே வந்தார்கள்.

பிறகு காரில் இருந்து இறங்கி விஜய் தனது வாக்கை செலுத்திவிட்டு சென்றார். வாக்கு செலுத்தும் போதும் விஜய்யை பார்க்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கூட்டமாக அந்த வாக்கு சாவடியில் கூடினார்கள். வாக்கு செலுத்திய பிறகு அங்கு இருந்த காவலர்கள் விஜய்யை பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர். அரசியல்வாதியாக விஜய் தனது முதல் வாக்கை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.