அரியலூரில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழ் ஆசிரியர் கைது..!

அரியலூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் காட்டுப்பிரிங்கியம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அருள்செல்வன்(35) என்பவர் தமிழாசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று அப்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவிக்கு அருள்செல்வன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தலைமையாசிரியை ராஜேஸ்வரியிடம் மாணவி புகார் தெரிவித்தார்.

மாணவி, தமிழாசிரியரை அழைத்து பேசிய தலைமையாசிரியர் இதை பெரிதுப்படுத்த வேண்டாம் என கூறியுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவர இன்று பள்ளியில் பெற்றோர்கள் முற்றுகையிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் டிஎஸ்பி மதன் அருள்செல்வனை போக்சோவிலும், புகாரை மூடி மறைக்க முயன்றதாக பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரியையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அருள்செல்வன் கடந்த மாதம் 10 ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

 

 

 

 

author avatar
murugan