தமிழ்நாடு முன்பை போல மாறியுள்ளது…! தமிழக முதல்வரை புகழ்ந்த கேரள அமைச்சர்…!

தமிழகம் முன்பை போல் மாறியுள்ளது. முதல்வர் நல்ல முறையில் ஆட்சி புரிவதாக கேரள தொல்லியல்துறை அமைச்சர் அகமது தேவர் கோவில் புகழாரம். 

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையை கேரள தொல்லியல்துறை அமைச்சர் அகமது தேவர் கோவில் நேரில் பார்வையிட்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், பத்மநாபபுரம் அரண்மனை தமிழ்நாடு-கேரள ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாக தெரிவித்தார். மேலும், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனை போல, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாகவும், தமிழகம் முன்பை போல் மாறியுள்ளது. முதல்வர் நல்ல முறையில் ஆட்சி புரிவதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.