ஈரானில் உள்ள மீனவர்களை மீட்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்

ஈரானில் உள்ள மீனவர்களை மீட்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

ஈரானில் சிக்கியுள்ள 300 தமிழக மீனவர்களை மீட்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம்  எழுதியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,  ஈரானில் உள்ள மீனவர்களை மீட்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது .வெளியுறவுத்துறை மூலம் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா தாக்குதலால் ஈரானில் வெளிநாடுகளுக்கு செல்லும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.