பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு !செப்டம்பர்  11-ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து செப்டம்பர்  11-ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழக அரசின் சிலை கடத்தல் பிரிவு அதிகாரியாக இருந்தவர் பொன்.மாணிக்கவேல் . கடந்த ஒய்வு பெற்ற இவர் நீதிமன்ற உத்தரவு மூலம் சிலை கடத்தல் பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் பணியில் இருந்த காலத்தில் தமிழக கோவில்களில் காணாமல் போன ஏராளமான சிலைகள் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. சிலைகள் காணாமல் போன வழக்குகள் விசாரணை நடந்து தொடர்ந்து வருகிறது.

சிலை கடத்தல் வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசிற்கு எதிராக  பொன்.மாணிக்கவேல்,  அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது சிலை கடத்தல் வழக்கு விசாரணைக்காக  நீதிமன்றத்திற்கு செல்லும் அதிகாரிகளுக்கு எந்த வசதியும் செய்து தரப்படவில்லை என்று  பொன்.மாணிக்கவேல் வருத்தம் தெரிவித்தார்.மேலும் ஏடிஜிபி  ஒருவர் மிரட்டுவதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு  நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

1.சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்காதது ஏன்?

2.துப்புரவு பணியாளர்களுக்கு கூட ஊதியம் வழங்க முடியாதா? 

3.சிறப்பு அதிகாரி விசாரணை நடத்துவதை ஏடிஜிபி எப்படி தடுக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியது.

இந்த வழக்கில் அரசின் நிலையை சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  இறுதியாக  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து செப்டம்பர்  11-ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம்.