எல்லையோர மாவட்டங்களில் திரையரங்குகள், வணிக வளாகங்களை மூட தமிழக அரசு அதிரடி உத்தரவு.!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக எல்லையில் உள்ள 16 மாவட்டங்களில் திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களை மார்ச் 31ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக எல்லையோர மாவட்டங்களான தேனீ, கன்னியாகுமரி, திருப்பூர், நெல்லை, தென்காசி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர், கோவை மற்றும் நீலகிரி போன்ற மாவட்டங்களில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்களை மார்ச் 31ம் தேதி வரை மூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். மேலும் வழிபாட்டு தலங்களுக்கு வருவோரை கண்காணிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்