தமிழகத்தின் கையிருப்பில் தற்பொழுது 5 லட்சம் தடுப்பூசிகள் உள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தற்போது தமிழகத்தின் கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னை பெருங்குடியில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் தொழு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தொடங்கி வைத்தார். அதன்பின், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பருப்பு, அரிசி, காய்கறி உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசி அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தமிழகத்தில் தொழு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 11 ஆயிரத்து 490 பேர் பயன் பெரும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி உள்ளது எனவும் கூறியுள்ளார்.

இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை தமிழகத்திற்கு 1,02,68,220 தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளதாகவும் அதில் 1,01,82,400 தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் தற்போது தமிழகத்தின் கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் மத்திய அரசு தமிழகத்திற்கு ஜூன் மாத 42 லட்சம் தடுப்பூசியை தருவதாக கூறியிருந்த நிலையில் இதுவரை 24 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளதாகவும் இன்னும் இந்த மாத இறுதிக்குள் 18 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசு சார்பில் தமிழகத்திற்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மாதத்திற்கு இரண்டு கோடி தடுப்பூசி கொடுத்தாலும் கூட தமிழக அரசு அதனை செலுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை தயாராக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

Rebekal

Recent Posts

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

5 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

11 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

13 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

14 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

15 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

15 hours ago