ஒடிசா மாநில முதல்வருடன் தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை.!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒடிசா முதல்வர் பட்நாயக்வுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 2 ம் கட்ட ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்திலும் மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் சிகிச்சை முறைகளை வகுக்க அமைக்கப்பட்ட 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் இன்று ஆலோசனை மேற்கொண்டார். மருத்துவ குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவுகள் வெளியாகும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அதுபோன்று இந்த ஆலோசனை கூட்டம் முடிந்தபின் பேசிய மருத்துவ நிபுணர் குழுவின் பிரதீப் கவுர், தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த முடியாது என்றும் பாதிப்பு குறைவாக உள்ள சில பகுதிகளில் படிப்படியாக ஊரடங்கை தளர்த்த முதல்வரிடம் ஆலோசனைகளை வழங்கியுள்ளோம் என்று கூறியுள்ளதாக தெரிவித்திருந்தார். இதனிடையே முதல்வர் பழனிசாமி, ஒடிசா முதல்வர் பட்நாயக்வுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இரு மாநில முதல்வர்களும் கலந்து ஆலோசித்து கொண்டனர். மேலும் தமிழகத்தில் ஒடிசா தொழிலாளர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து முதல்வர் பட்நாயக் கேட்டு தெரிந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்