தாய்லாந்தில் பயங்கரம்.! 22 குழந்தைகள் உட்பட 34 பேர் சுட்டுக்கொலை.!

தாய்லாந்து நாட்டில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்குள் புகுந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி, தான் வைத்திருந்த துப்பாக்கியால், அங்கிருந்த 22 குழந்தைகள் உட்பட 34 பேரை சுட்டுகொன்றுள்ளார். 

தாய்லாந்து நாட்டில், வடக்கு பகுதியில் அமைந்துள்ள நோங் புவா லாம்புவில்  செயல்பட்டு வரும் குழந்தைகளை பராமரித்து பார்த்துக்கொள்ள மையத்தில் இன்று காலை ஓர் பேரதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அந்த மையத்திற்கு வந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஒருவர் உள்ளே புகுந்து தான் வைத்திருந்த துப்பாக்கியால் 22 குழந்தைகள் உட்பட 34 பேரை கொன்றுள்ளான்.

இந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கடந்த வருடம் போதை பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக பணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்துள்ளார். மேலும், அந்த கொலையாளி, தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையையும் கொலை செய்துவிட்டு, பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment